உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலமும், வியாழன் தோறும் தேங்காய் பருப்பு ஏலமும் நடந்து வருகிறது. பரமத்தி வேலுார், பொத்தனுார், மோகனுார், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தேங்காய் விவசாயிகள், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நேற்று நடந்த ஏலத்திற்கு, 11,877 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில், தேங்காய் அதிகபட்சம் கிலோ, 26.39 ரூபாய், குறைந்தபட்சம், 22.10 ரூபாய், சராசரி, 25.79 ரூபாய் என, மொத்தம், 28,000 ரூபாய்க்கு வர்த்தகமானது.இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ, 24.19 ரூபாய், குறைந்தபட்சம், 21.25 ரூபாய், சராசரியாக, 22.29 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை