வளர்ச்சி பணிகள் ஆய்வு
எருமப்பட்டி நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார். இதேபோல், புதுச்சத்திரம் அருகே, பிடாரிப்பட்டி அணைக்கட்டு முதல் தோட்டகூர்பட்டி அணைக்கட்டு வரை, ஏரி துார்வாரும் பணி; துாசூர் அருகே, பாலம் அமைக்கப்பட்டு வரும் பணி; பெரியகுளம் கால்வாய் துார்வாரப்பட்டு வரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் உமா உடனிருந்தார்.