உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம் சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு

விவசாயிகள் குறைதீர் கூட்டம்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்புநாமக்கல், அக். 24-'நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (அக்., 25) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். கூட்டத்தின் மூலம் வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை