உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை நாமக்கல், பரமத்தியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை நாமக்கல், பரமத்தியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை நாமக்கல், பரமத்தியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்நாமக்கல், டிச. 19-'நாளை, நாமக்கல், பரமத்தியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், நாளை (டிச., 20) நடக்கிறது. அன்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல்லில், பி.டி.ஓ., அலுவலகத்திலும், பரமத்தி பி.டி.ஓ., அலுவலகத்திலும் நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விபரம், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ