8ம் ஆண்டு நினைவு தினத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கல்
சேந்தமங்கலம், டிச. 17-சேந்தமங்கலம் முதியோர் இல்லத்தில், முதியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேந்தமங்கலம் ஜி.பி.புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் பூபாலன், 8ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று சேந்தமங்கலத்தில் உள்ள மார்லிங் முதியோர் இல்லத்தில், உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள, 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றவர்களுக்கு, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் வருதராஜன், சேந்தமங்கலம் யூனியன் முன்னாள் சேர்மன் ராஜாமணி, கொண்டமநாய்க்கன்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீபாலன், இளவரசன் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர்.