உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல்: 'நாமக்கல்லில், வரும், 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இது-குறித்து அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் காஸ் நிறு-வன மேலாளர்கள், காஸ் முகவர்கள், வினியோகஸ்தர்கள், காஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில், வரும், 31 மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது.காஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்-கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு காஸ் வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை