மேலும் செய்திகள்
பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
21-Sep-2025
ப.வேலுார், பரமத்தி அருகே தொட்டிபட்டி சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில் விஜயதசமியான நேற்று குருபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் நடப்பாண்டு 107 ம் ஆண்டு சாய் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.அதையொட்டி விடியற்காலை 5:00 மணி முதல் இரவு 9;15 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை, ஆரத்தி தரிசனமும் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அதேபோல் காலை 9:30 முதல் 10;30 மணி வரை ஸ்ரீவித்தியா ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்க பரமத்தி,ப.வேலுார்,நாமக்கல், கரூர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
21-Sep-2025