உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குருவார சிறப்பு பூஜை

குருவார சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில் நேற்று குருவார பூஜை நடந்தது. அதன்படி நேற்று மதியம், 12:00 மணிக்கு சித்தருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. செக்காரப்பட்டி, நாகர்பாளையம், மரப்பரை, குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, கல்லுபாளையம், சின்னமணலி, பெரியமணலி, கருங்கல்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை