மேலும் செய்திகள்
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
02-Dec-2024
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
03-Dec-2024
அரசு திட்டங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தைஉயர்த்திக் கொள்ளணும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சுநாமக்கல், டிச. 8-''அரசின் திட்டங்களை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்' என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.'உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 202 மாற்றுத்திறனாளிகளுக்கு, 54.16 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கும் விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அங்கீகரித்து மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை உருவாக்கினார். உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்க வேண்டும் என்ற நோக்கில், டிச., 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 49,058 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை, 22,331 பேருக்கு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் மட்டும், 3,068 பேருக்கு, தேசிய அடையாள அட்டையும், 5,474 பேருக்கு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2023-24ல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, திறன் பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் அனைத்து வகை உதவி உபகரணங்கள், 501 பேருக்கு, 28.76 கோடி ரூபாய் மதிப்பிலும், எம்.பி., மேம்பாட்டு நிதியிலிருந்து, 79 பேருக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 57.36 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, 72 பேருக்கு, 54.16 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அரசின் திட்டங்களை பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
02-Dec-2024
03-Dec-2024