மேலும் செய்திகள்
டீ மாஸ்டர் மர்ம சாவு போலீசார் விசாரணை
05-Aug-2025
எருமப்பட்டி, எருமப்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில், முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள், முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மேல் மூத்தோருக்கான கோ-கோ விளையாட்டு போட்டி, எருமப்பட்டி ஆர்.என்., ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடந்தது. திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், முத்துக்காப்பட்டி மற்றும் தி மாடர்ன் அகாடமி உள்ளிட்ட, 8க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில், முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதேபோல், மல்லசமுத்திரம் அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் பிடித்தனர். முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
05-Aug-2025