வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உலக சாதனை படைத்த நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவன் காவியனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அவர் மேலும், மேலும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துவோம்.
நாமக்கல், நாமக்கல் காவேட்டிபட்டியில் உள்ள குறிஞ்சி பள்ளி, பல ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. உலக சாதனை வரிசையில், சிலம்பம் போட்டியானது வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கிரகம்பெல் உலக சாதனை என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நாமக்கல் மாவட்டம், குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் காவியன் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவனை பள்ளி தாளாளர் தங்கவேல், முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.
உலக சாதனை படைத்த நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவன் காவியனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அவர் மேலும், மேலும் சாதனைகள் பல படைக்க வாழ்த்துவோம்.