உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி

சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பு நிறமாறிய தண்ணீரால் மக்கள் அதிர்ச்சி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாய ஆலை-களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வருகிறது.இ.ஆர்., தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கிணற்று நீரிலும் சாயக்கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் நிறமாறி காணப்படு-கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு பகுதியை சுற்றி, 2 கி.மீ., துாரத்தில் செயல்படும் சாய ஆலைகளால் தான், நிலத்தடி நீரும், கிணற்று நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த, மூன்று நாட்களாக இந்த நிலைமை காணப்படுகிறது. இது இன்னும் அதிகரித்து அப்பகுதி மட்டுமில்லாமல், சுற்று வட்-டார பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். அதனால், விதிமீறிய சாய ஆலைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !