உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிரந்தர பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

நிரந்தர பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

நாமக்கல்: 'சோழசிராமணி ஊராட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், கலெக்-டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சோழசிராமணி ஊராட்சி, சக்-திபாளையம் அருந்ததியர் காலனியில்,70 ஆண்டுகளாக, 45 குடும்-பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் தற்காலிக பட்டா கிடைத்தபோதும், நிரந்தர பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மூலம் எங்க-ளுக்கு நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை