உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் இறந்த பெண் போலீஸ் ; குண்டுகள் முழங்க இறுதி சடங்கு

விபத்தில் இறந்த பெண் போலீஸ் ; குண்டுகள் முழங்க இறுதி சடங்கு

நாமகிரிப்பேட்டை : ஓட்டு எண்ணும் மையத்தில், பணியை முடித்து விட்டு திரும்பும்போது, விபத்தில் இறந்த பெண் போலீஸ் இறுதி சடங்கில், குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மனைவி அமுதா, 46, இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். அமுதா நாமகிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார். இரவு, 10:00 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு டி.வி.எஸ்., மொபட்டில் வந்து கொண்டிருந்தார். 85.கொமராபாளையம் பகுதியில் வரும்போது, திருச்செங்கோடு நோக்கி சென்ற ஈச்சர் வேன், அமுதா மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.நேற்று அமுதா உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆயில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நாமக்கல் கலெக்டர் உமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போலீசார் வானத்தை நோக்கி, 27 முறை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறந்த அமுதா காவல்துறை சார்பில் மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை