மேலும் செய்திகள்
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
15-Jan-2025
ராஜிவ்காந்தி கல்லுாரியில் பொங்கல் விழா
14-Jan-2025
ராசிபுரம்: ராசிபுரம், முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லுாரியில் பொங்கல் தினவிழா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உறி அடித்தல், கயிறு இழுத்தல் ஆகியவற்றோடு கோலப்போட்டி, லக்கி கார்னர் ஆகிய விளையாட்டு போட்டிகளும், தமிழ் இலக்கியப் போட்டிகளான கட்டுரை, ஓவியம், கவிதை ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. பங்கு பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ராசிபுரம் முத்தாயம்மாள் எஜூகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் தாளாளர் கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி ஆகியோர் தங்களது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்லுாரி இணை செயலாளர் ராகுல், நிர்வாகக்குழு உறுப்பினர் உமாராணி குணசேகரன், செல்வி காவ்யா ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர்கள் மாதேஸ்வரன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது.
15-Jan-2025
14-Jan-2025