உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

நாமக்கல், டிச. 13-ரேஷன் கார்டில் உள்ள குறைகளை தீர்க்கும் வகையில், நாளை (14ம் தேதி) நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் அட்டை கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய பகுதியில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த, தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ