உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

பசிறு மலையில் மரக்கன்று நட கோரிக்கை

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தையொட்டி, பசிறு மலை அமைந்துள்ளது. புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, மூலப்பள்ளிப்-பட்டி ஊராட்சி ஆகியவைகளின் எல்லையில், இந்த மலை அமைந்துள்ளதால், இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த மலை பெரும் உதவியாக இருக்கிறது. மழைக்காலங்களில் பசிறு மலையை சுற்றியுள்ள பகுதியில் தான் அதிக மழை பொழிகிறது. அதேபோல், மலையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் நிலத்-தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க இந்த மலையும் ஒரு காரணம்.இந்த மலையில் மரங்கள் தற்போது குறைந்து வருகிறது. இதனால், இப்பகுதி இளைஞர்கள் பசிறுமலையை மையமாக வைத்து, கடந்த சில ஆண்டுகளான விதை பந்து வீசினர். அது-மட்டுமின்றி மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இதனால், மரங்களும், செடிகளும் அதிகளவு வளர்ந்திருந்தன. ஆனால், கடந்தாண்டு கோடை காலத்திற்கு முன் பசிறு மலையில் பெரும்-பகுதி காட்டு தீ பரவியது. இதில், 80 சதவீதம் மரங்கள் முற்-றிலும் எரிந்து சாம்பலாகின. அதன் பிறகு பசிறுமலையில் மிக குறைந்த அளவே மரங்கள் உள்ளன. எனவே, வனத்துறையினர் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி விவசா-யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ