டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு காப்பு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கொண்டம்பட்டி மேட்டில் டூவீலரில் சென்ற பெண்ணின் நகையை பறித்து சென்ற, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.சேந்தமங்கலம் அருகே, கொண்டமநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி, 55; இவர், 11ல் நாமக்கல் சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக, டூவீலரில் புறப்பட்டுள்ளார். அப்போது, பின்னால், டூவீலரில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த, இரண்டு பேர் மலர்கொடி அணிந்திருந்த, ஐந்து பவுன் நகையை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தப்பினர்.இதுகுறித்து, மலர்கொடி அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் குற்றவாளிகள் எந்த பக்கம் சென்றனர் என, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் சென்ற டூவீலர் எண், மொபைல் போன் எண்ணை வைத்து, அவர்களை சேலத்தில் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விவாரணையில், சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த யுவராஜ், 25, ரஞ்சித்குமார், 22, என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து, ஐந்து பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.