மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 27 டன் காய்கறி விற்பனை
21-Oct-2024
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 25 டன் காய்க-றிகள், 10.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வரு-கிறது. இங்கு, தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்க-மாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்க-ளுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மொத்தம், 180 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தி-ருந்தனர். 20,365 கிலோ காய்கறிகள், 4,695 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என, மொத்தம், 25,080 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, 5,016 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 10 லட்சத்து, 50,505 ரூபாய்க்கு விற்பனையானது.
21-Oct-2024