விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
சேந்தமங்கலம்: கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள தத்தாஸ்ரமத்தில் உள்ள சங்கடஹர விநாயகர் கோவிலில், நேற்று காலை யாக வேள்வியுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து, விநாயகருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதேபோல், காந்திபுரம் கரு மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள விநாயகர் மற்றும் செல்ல கணபதி கோவிலிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. சுற்று வட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.