உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரேஷன் கார்டை திருத்த இன்று சிறப்பு முகாம்

ரேஷன் கார்டை திருத்த இன்று சிறப்பு முகாம்

ராசிபுரம்: நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.மேலும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும்; பொது வினியோக திட்ட சேவை-களை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும்; குடும்ப அட்-டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லி-மலை, திருச்செங்கோடு, பரமத்திவேலுார், குமாரபாளையம் தாசில்தாார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை