உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. தை அமாவாசையையொட்டி, நேற்று மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வா-னையுடன் சிறப்பு தோற்றத்தில் முருகன் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பலவகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்-தது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரி-சையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிர-சாதம் வழங்கப்பட்டது. அதேபோல், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைகுன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், மதியம், 1:00 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜை நடந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ