உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

பக்த ஆஞ்சநேயருக்குசிறப்பு வழிபாடுசேந்தமங்கலம், டிச. 8-சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் பிரசித்தி ‍பெற்ற பெரியமலை பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதேபோல், நேற்று காலை, மலை உச்சியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், பக்த ஆஞ்சயேருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை