உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

விபத்தை தடுக்க வேகத்தடை தேவை

வெண்ணந்துார்: வெண்ணந்துார், ஆர்.புதுப்பாளையம் பகுதியில், ராசிபுரத்தில் இருந்து குட்டலாடம்பட்டி வழியாக சேலம் செல்லும் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மல்லுார், பனமரத்துப்பட்டி வழி-யாக சேலம் செல்ல எளிதாக இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இந்த சாலையில் காலை, மாலை நேரத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் பயணிக்கின்றனர்.சாலையில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, காளி-யம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலை வளைவில், அவ்வப்-போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. பெரிய விபத்து நடக்-காமல் தவிர்க்க, வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ