உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி வருவாய்த்துறை மீண்டும் தொடர் போராட்டம்

வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி வருவாய்த்துறை மீண்டும் தொடர் போராட்டம்

நாமக்கல்: 'வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ப.வேலுார் தாலுகா, நருவலுாரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருபவர் ராமன். இவர் கடந்த, 4ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை வெட்டிய, அப்பகுதியை சேர்ந்த விவசாயி திருமுருகனிடம், கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாய் தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இதுகுறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட விவசாயி திருமுருகனை போலீசார் கைது செய்யவில்லை.இச்செயலை கண்டித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 7ல், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த, 9ல், மாவட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதையடுத்து, வரும், 13 மாலைக்குள் (நேற்று முன்தினம்) கைது செய்துவிடுவதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆவேசமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டத்தில், இருப்பிடம், ஜாதி, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் பணி முடங்கியதுடன், அனைத்து கோப்புகளும் தேக்கமடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை