கோவிலில் பூஜை செய்ய உரிமை இரு தரப்பு மோதலால் பரபரப்பு
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்-வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தாவா-கவும், பூசாரியாகவும் உரிமை கொண்டாடி இரு தரப்பினர் அடிக்-கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு தரப்பினர் நீதி-மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரு தரப்பினர், 'கோவிலில் பூசாரியாக உரிமை கொண்டாட எங்க-ளுக்கு தான் உரிமை உள்ளது' எனக்கூறி, கோவிலை திறக்க வந்-தனர். இதற்கு மற்றெரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பீமநாய்க்கனுாரில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின், சேந்தமங்கலம் தாசில்தார் வெங்க-டேசன், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில், கோவில் திறக்க தடை ஆணை உள்ளதாக ஒரு தரப்-பினர் கூறும் நிலையில், வரும், 21க்குள் தடை ஆணையை ஒரு தரப்பினர் தர வேண்டும்; இல்லை என்றால் கோவிலை திறக்க அனுமதி வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டது.