உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கே.வி.கே.,வில் வரும் 10ல் திலேபியா மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல் கே.வி.கே.,வில் வரும் 10ல் திலேபியா மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல் :'வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 10ல், திலேபியா மீன் வளர்ப்பு குறித்து ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, அதன் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 10 காலை, 10:00 மணிக்கு, 'திலேபியா மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.இப்பயிற்சியில், மீன்பண்ணை குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணை குட்டை அமைத்தல், மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள், மத்திய, மாநில அரசின் மீன் வளர்ப்புக்குரிய மானியம் குறித்து விளக்கப்படுகிறது.மேலும், தேசிய மீன்வளர்ப்பு தினத்தை முன்னிட்டு, விவசாயிகளிடம் மீன்களை பற்றி வினா விடை கேட்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 7358594841, 04286 266345, 266650 என்ற மொபைல், தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை