உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சீதாராம் யெச்சூரிக்கு முதலாமாண்டு அஞ்சலி

சீதாராம் யெச்சூரிக்கு முதலாமாண்டு அஞ்சலி

குமாரபாளையம், குமாரபாளையம், மா.கம்யூ., கட்சி, நகர குழு சார்பில் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நகர குழு செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார்.இதில், சீதாராம் யெச்சூரி உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலரும் சீதாராம் யெச்சூரியின் சாதனை பணிகள் குறித்து நினைவு கூர்ந்து பேசினர். இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ