மது பாரை மூடக்கோரி த.வெ.க., ஆர்ப்பாட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கண்டிப்புதுர் குடியி-ருப்பு பகுதியில், கடந்த, 15 நாட்களுக்கு முன் தனியார் மதுபான பார் திறக்கப்பட்டது. பார் திறப்பதற்கு முன்பே, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பொது மக்களின் எதிர்ப்பை மீறி பார் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாரை மூடக்கோரி, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பள்ளிப்பாளையம் நகர, த.வெ.க., சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.