மேலும் செய்திகள்
உயர் உரக்கலவை கரைசல் காய்கறி சாகுபடிக்கு உகந்தது
13-Sep-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை, 2 கிலோ அளவில் பறித்துக்கொள்ள வேண்டும். பின், நீருடன் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இதிலிருந்து, 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். இந்த கரைசல் கலவையை மண்-பானையில் ஒரு வார காலத்துக்கு புளிக்கவிட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன், 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் மூலம் இரண்டு விதமான பலன்கள் கிடைக்கும். அதாவது, அரப்பு மோர் கரைசல் தெளிப்-பதால் பூச்சிகள் துார ஓடிவிடும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.நிறைய பூக்கள் பூக்கும். இந்த கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால், பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து எதிர்பார்க்கும் விளைச்சலும் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Sep-2025