மேலும் செய்திகள்
12 வாகனங்கள் ஏலம்
02-Apr-2025
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 20 வாகனங்கள், 7.90 லட்சம் ரூபாய்க்கு பொது ஏலத்தில் விற்கப்பட்டன.நாமக்கல் மாவட்டத்தில், கள்ளச்சாராயம், போலி மதுபானம் கடத்திச்சென்ற வாகனங்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். அவற்றை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விடப்படும். அதன்படி, நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில், நேற்று, 20 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தொடங்கி வைத்தார். கூடுதல் ஏ.எஸ்.பி., தனராசு, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில், வாகனங்கள் ஏலத்துக்காக முன்தொகை செலுத்தியவர்கள், பார்வையிட்டு எடுத்தனர். மொத்தம், ஏழு லட்சத்து, 90,000 ரூபாய் வரை வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையை ஏலம் எடுத்தோர் தாமதமின்றி செலுத்த வேண்டும் என, மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு தெரிவித்தார்.
02-Apr-2025