| ADDED : மே 28, 2024 07:10 AM
ராசிபுரம் : ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கிய கோடை மழை தொடர்ந்து பெய்து வந்தது. 10 நாட்களுக்கு மேல் தினமும் மழை பெய்ததால் பல்வேறு பணிகள் முடங்கின.நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்தி செய்வது மிகவும் பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை தொழிலாக அப்பள உற்பத்தியை செய்து வருகின்றனர். வேகவைத்து, வெயிலில் நன்றாக காய வைத்து தான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.தொடர் மழை காரணமாக நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. பண்டிகை, மழை காரணமாக, மே மாதம் தொடங்கியதில் இருந்தே அப்பள உற்பத்தி முடங்கியிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுளிர் என அடிப்பதால் நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டியில் அப்பள உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.