உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அருகே துப்பாக்கிகள் பறிமுதல்

ஊட்டி அருகே துப்பாக்கிகள் பறிமுதல்

ஊட்டி :தமிழக-கர்நாடக எல்லை செக்போஸ்டில் நேற்றிரவு நடந்த சோதனையில், சுற்றுலா பயணியிடமிருந்து இரண்டு நவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தமிழக எல்லையில் உள்ள கக்கநல்லா செக்போஸ்டில் நேற்றிரவு வழக்கம்போல் வாகன சோதனை நடந்தது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த வேனை சோதனையிட்டதில் சுற்றுலா பயணிகளிடம் இரண்டு வெளிநாட்டு நவீன துப்பாக்கிகள் இருந்தன. இந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்த மசினகுடி போலீசார், இவை எதற்காக எடுத்து வரப்பட்டன. எங்கிருந்து துப்பாக்கி வாங்கப்பட்டன என்பது குறித்து சுற்றுலாப்பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை