| ADDED : ஏப் 12, 2024 01:46 AM
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் கம்மாத்தி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ், 62. முன்னாள் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவரான இவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். விவசாயம், வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை செய்கிறார். காம்மாத்தி பகுதியில் உள்ள இவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு இரு வாகனங்களில் வந்த, 8 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையை துவக்கினர்.மொத்தம், 29 மணி நேரம் சோதனை நடந்தது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. அதில், கைப்பற்றப்பட்ட நிலங்கள் மற்றும் வியாபாரம் தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.தாமஸ் கூறுகையில், ''என்னிடமிருந்து நிலம், கடை தொடர்பான ஆவணங்களை மட்டுமே, அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்,'' என்றார்.