தனி தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊட்டி : நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தின் அகில இந்திய தொழிற் தேர்வில், தனி தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.2025, ஜூலை மாதம் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணம், 200 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன், குன்னுார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதநிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு, அக்., 15, செய்முறை தேர்வு, 16ம் தேதியிலும், கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.முழு வழிகாட்டுதல்களை இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித் தேர்வராக விண்ணப்பிக்க, வரும், 18ம் தேதி கடைசி நாள். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.