நேரு பூங்காவில் பசுமை விளையாடிய சிறுவர்கள்
கோத்தகிரி;கோத்தகிரி நேரு பூங்காவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் மழையிலும் விளையாடி மகிழ்ந்தனர்.கோத்தகிரி பேரூராட்சி பராமரித்து வரும் நேரு பூங்காவில் நடப்பாண்டு, லோக்சபா தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பூங்கா நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு, மழை காரணமாக பசுமைக்கு திரும்பிய நிலையில், சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை குறைந்துள்ளது. பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. நேற்று சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சிறுவர் பூங்காவுக்கு வந்து விளையாடினர்.