உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பவானீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஊட்டி: ஊட்டி அருகே பவானீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பகுதியில் பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஒட்டி கடந்த, 14ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, ருத்ர ஹோமம், திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, கோபுர கலசங்களை வைத்தல், அஷ்டபந்தன நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசங்கங்கள் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து, மஹா கும்பாபிஷேகம் காலை, 9:45 மணிக்கு தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இதன் பின்னர், 10:45 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், பகல் 12:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ