உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்

வனப்பகுதியில் சிறிது நேரம் சண்டை: சமாதானமடைந்த யானைகள்

பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு சின்கோனா வயல் பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளது. அதில், இரண்டு ஆண் யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டது. ஒரு ஆண் யானையை மற்றொரு ஆண் யானை, துரத்தி சென்றது. பின்னர் மீண்டும் சண்டையிட்டு கொண்டன.பிளீரலுடன் சண்டையிட்ட யானைகள் சிறிது நேரம் முடிந்ததும், சமாதானம் அடைந்து அங்கிருந்து, வேறு பகுதிக்கு சென்றன. அங்கே மேய்ச்சலில் ஈடுபட்ட யானைகள், அவ்வப்போது கோபத்தில் பிளீரியது பார்வையாளர்களை அச்சம் அடைய செய்தது. யானைகள் சண்டையிட்ட காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ