உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரயில்வே குடியிருப்பு அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறை

ரயில்வே குடியிருப்பு அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு துறை

குன்னுார்;குன்னார் ரயில்வே குடியிருப்பு பகுதியில் வனத்தீ ஏற்பட்டது.குன்னுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆங்கங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று மதியம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டது. அரை ஏக்கர் பரப்பில் முட்புதர்கள், செடிகள் எரிந்து சேதமாகின.தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ