உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ராட்சத மரம் விழுந்ததில், பழங்குடியின மூதாட்டி காயம்

ராட்சத மரம் விழுந்ததில், பழங்குடியின மூதாட்டி காயம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் புளியாம்பாறை அருகே, கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் நேற்று மாலை, ராட்சத மரம் விழுந்து, சமையலறை சேதமடைந்தது. அப்போது அதனுள் சமைத்துக் கொண்டிருந்த, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மூதாட்டி சாமா, 60, காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கூடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சமையலறை மீது விழுந்து ராட்சத மரத்தை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ