வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யானைகள் உலாவும் இடமெல்லாம் அதன் இருப்பிடங்கள். அதனால், அங்கு வசிக்கும் மக்களைத்தான் முதலில் அப்புறப்படுத்தனும்.
பந்தலுார்; பந்தலுார் அருகே காவயல் பகுதியில், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு நாள்தோறும் வரும் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவயல் அமைந்துள்ளது. இப்பகுதியில், டான்டீ தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மழவன் சேரம்பாடியில் இருந்து சேரம்பாடி மற்றும் கையுன்னி, காரக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையும் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட, டான்டீ தேயிலை தோட்டத்தில் நாள்தோறும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால், தொழிலாளர்கள் மற்றும் பிற மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்கள் குடியிருப்புகளில் இருந்து, 30 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் கழிப்பிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, முகாமிட்டுள்ள யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.
யானைகள் உலாவும் இடமெல்லாம் அதன் இருப்பிடங்கள். அதனால், அங்கு வசிக்கும் மக்களைத்தான் முதலில் அப்புறப்படுத்தனும்.