இந்திரா நகரில் மீண்டும் கரடி: கூண்டு வைக்க வலியுறுத்தல்
குன்னுார்: குன்னுார் இந்திரா நகரில், மீண்டும் கரடி வந்து சென்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் இந்திரா நகர் பகுதியில், அடிக்கடி இரவு நேரங்களில் கரடி வந்து செல்வதால், மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தில் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று, சத்து மாவு, அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டும் சேதம் செய்து செய்கிறது. இந்நிலையில், மீண்டும் கரடி வந்து சென்றது. மக்களுக்கு அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.