மேலும் செய்திகள்
இன்று இனிதாக (28.02.2025) திருவள்ளூர்
28-Feb-2025
கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை அருள்மிகு ஸ்ரீ பிஷல மாரியம்மன் திரு விழா நேற்று கோலாகலமாக நடந்தது.விழாவில், 15ம் தேதி பகல், 12:00 மணிக்கு, கட்டைகுள்ளு பகுதியில் இருந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, பில்லிகம்பை ஊரில் இருந்து, அம்மன் வனக்கோவில் புறப்பாடு நடந்தது.முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, அரக்கோல் இசை முழங்க, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, கங்கை பூஜையுடன், முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து மாலை, 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.இரவு, 8:30 மணிக்கு, ஸ்ரீ பாரதமாதா பஜனை சபா குழுவினரின், 'கார சென்னே' என்னும் படுகு சமுதாய நாடகம் நடந்தது. விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை, 8:30 மணி முதல், 11:30 மணி வரை,'கக்கே ரய்யா' கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, அரக்கோல் ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
28-Feb-2025