நகரில் முகாமிடும் கால்நடைகள்; வாகனங்கள் இயக்க சிரமம்
ஊட்டி : ஊட்டி நகரில் முகாமிடும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.ஊட்டியில் மழை பெய்து வந்தாலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்களும் அதிகரித்து வருகிறது. அதில், கமர்ஷியல் சாலை, ஐந்துலாந்தர் பகுதி, பஸ்ஸ்டாண்ட், படகு இல்ல சாலைகளில் குதிரை; மாடுகள் அதிகளவில் நடமாடுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவில் சாலையில் எருமைகள் நடப்பதால், பாதசாரிகள் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.