உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை தோட்டங்களில் மேக மூட்டம்; கொப்புள நோய் தாக்கும் அபாயம்

தேயிலை தோட்டங்களில் மேக மூட்டம்; கொப்புள நோய் தாக்கும் அபாயம்

கோத்தகிரி; மூட்டமான காலநிலை காரணமாக, தேயிலை தோட்டங்களில், கொப்புள நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் முக்கியமானதாக உள்ளது. இத்தொழிலை, 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட, தொழிலாளர்களும் நம்பியுள்ளனர்.தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு அதிகபட்சம், 20 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. உரம் உட்பட, இடுபொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் தோட்ட பராமரிப்பு செலவு ஆகிய செலவினங்கள் அதிகரித்துள்ளது.இதனால், விவசாயிகளுக்கு தற்போது கிடைத்து வரும் விலை போதுமானதாக இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சாரல் மழையுடன், மேகமூட்டமான காலநிலை தொடர்கிறது.விவசாயிகள், தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரித்து வரும் நிலையில், போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே, தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், மேகமூட்டமான காலநிலை தொடருவதால், தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பசுந்தேயிலை மகசூல் குறையும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை