மேலும் செய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
22-Sep-2024
குன்னுார்: வடகிழக்கு பருவ மழையையொட்டி தீயணைப்பு துறையினரின், பேரிடர் ஒத்திகை செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடந்தது.குன்னுாரில், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிலைய அலுவலர் குமார் முன்னிலையில், வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில், 'தீ ஏற்பட்டால் அணைப்பது; விஷ வாயு கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பு உடைகள் அணிந்து உள்ளே சென்று மீட்பது,' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததுடன், மீட்பு உபகரணங்கள்காட்சிபடுத்தப்பட்டது.
22-Sep-2024