விறகு லாரி கவிழ்ந்து விபத்து
கூடலூர்: கூடலூர், நாடுகாணி முதல் தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. கேரளாவில் இருந்து நேற்று, அதிகாலை விறகு ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி வந்த, லாரி தமிழக - -கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுனர்கள் கூறுகையில், 'தமிழக -- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல் நாடுகாணி வரை, சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இச்சாலையில் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகிறோம். ஆனாலும், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. விபத்துக்களை தடுக்க சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என்றனர்.