காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
கூடலுார்: முதுமலை மசினகுடி தெங்குமரஹாடா வனப்பகுதியில், பெண் யானை, குட்டி ஈனுவதில் ஏற்பட்ட பிரச்னையில்பரிதாபமாக உயிரிழந்தது. முதுமலை, மசினகுடி கோட்டம், நீலகிரி கிழக்கு வனச்சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில், 22ம் தேதி மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் போது, பெண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் உடலை, வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வன ஊழியர்கள் நேற்று செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 40 வயது இருக்கும். கர்ப்பமாக இருந்த பெண் யானை குட்டி ஈனுதல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக உயிரிழந்திருக்கலாம். எனினும் ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்தப்பின், வேறு காரணம் இருப்பின் தெரியவரும்,' என்றனர்.