உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை பலி வனத்துறை விசாரணை

காட்டு யானை பலி வனத்துறை விசாரணை

கூடலுார், : மசினகுடி சீகூர் வனப்பகுதியில், காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.மசினகுடி சீகூர் வனச்சரகம் ஆனைகட்டி எடகரப்பள்ளம் பகுதியில், வன ஊழியர்கள் நேற்று முன்தினம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி ஆற்றின் கரையை ஒட்டி ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.பறக்கும் படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், சீகூர் வனச்சரக தயானந்தன் அதன் உடலை ஆய்வுசெய்தனர். முதுமலை வனகால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'உடல் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. வேறு காரணங்கள் இருப்பின், ஆய்வு முடிவுகள் வந்த பின் தெரிய வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை