உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

பந்தலுார் பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்த, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 5-ம் வகுப்பு நிறைவு செய்து, 6-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை